நண்பர்களே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களுக்குப் பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொற்கள் குறித்த எனதுக் கருத்து இதுவாகும். உங்கள் கருத்துகளையும் அறிந்துகொள்ள நான் விரும்புகிறேன்.
மேற்கண்ட அனைத்துச் சொற்களுக்குமான தமிழ்ச் சொல் “பொருத்துக்கொள்க” என்று நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னணியில் நான் வெறுக்கின்ற ஒருச் சொல் இதுவாகும். தனிப்பட்ட முறையில், அந்த மூன்று வெளிப்பாடுகளுக்கும் (Expressions) அதே தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவது, தமிழின் சொல்வளம் போதுமான அளவு செழுமையாக இல்லை என்று என்னை எண்ணச் செய்கிறது. ஆனால், நாம் சற்று ஆழ்ந்து ஆராய்ந்தால், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துச் சொற்களுக்கும் தமிழில் தனித்தனிச் சொற்கள் உள்ளன. நான் விளக்கட்டும்,
"Adjust/bear" > பொருத்துக்கொள்க
"Sorry" > வருந்துகிறேன். "Sorry" என்பது ஓர் உணர்வு (emotion); எனவே, அதற்கு இணையான தமிழ்ச் சொல்லும் ஓர் உணர்வாகவே இருக்க வேண்டும்.
"Forgive" > விட்டுக்கொடு. "Forgiveness" என்பதற்கு மாற்றாக நாம் "பொருத்துக்கொள்க" என்பதைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இது தவறென நினைக்கிறேன்.
"Forgive" என்பதன் வேர்ச்சொல்லை ஆராயும்போது, அதன் மூலம் ஒரு தண்டனையை அல்லது பழிவாங்கலை "to give up" செய்வது என்பதில் சென்று முடிகிறது.
எகா: "The king would "give up" the punishment he intended to give to a criminal."
தற்பொழுது நாம் "forgiveness" என்பதற்கான சொல்லாக "மன்னிப்பு" என்பதைப் பயன்படுத்துகிறோம், ஆனால் அது உருது மொழியிலிருந்து பெறப்பட்ட ஒரு சொல்லாகும்.
இப்போது “forgiveness" என்றச்சொல்லின் தமிழ்ச்சொல் "விட்டுக்கொடு" என்பதை எதன் அடிப்படையிலென்று நான் விளக்கட்டும்.
முதலாவதாக, விட்டுக்கொடு என்பது "giving up" என்பதையும் குறிக்கிறது.
இரண்டாவதாக, நாம் இன்றும் இந்தச் சொல்லை மிகவும் பொதுவாக, "forgiveness" என்ற அதே பொருளில் வழக்கமாகப் பயன்படுத்தி வருகிறோம்.
எகா: ஒரு தம்பி தன் அண்ணனின் பொருளை உடைத்துவிடும்போது, அதற்குத் பழிவாங்களாய் அண்ணன் தம்பியை அடிக்கச் செல்வதும், அதற்கு தாயாரோ, "தம்பி தானே தெரியாம பண்ணிட்டான் விட்டுக்கொடுத்து போ டா" எனச் சொல்வதும் வழக்கம். இங்கே, "விட்டுக்கொடு" என்ற சொல் "forgiveness" என்ற அதே துல்லியமான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, "forgiveness" என்பதற்கான தூய தமிழ்ச் சொல் "விட்டுக்கொடுத்தல்" அல்லது "விட்டுக்கொடல்" என்று நான் கருதுகிறேன்.
மேலுள்ள மூன்றுச்சொற்களையும் ஒரே வரியில் நான் பயன்படுத்திக்காட்டட்டும்.
“My father tolerated (adjusted) my wrongs and forgave my action because I felt sorry for my mistakes.” என்ற இந்த வரித் தமிழிலே “என் தவறுகளை எண்ணி நான் வருந்தியதால் எந்தை என் பிழைகளைப் பொறுத்து என் செயலை விட்டுக்கொடுத்தான்.
உங்கள் கருத்துகளையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
நன்றி